மேற்கு மண்டலம்
ஆகஸ்ட் 06 பாபுவா பணித்தளத்தில் நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில் 300 விசுவாசிகள் கலந்துகொண்டனர். சகோ. வின்சென்ட் ஜெயராஜ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்து கொண்டார். பாதங்கழுவுதலுடனும் மற்றும் கர்த்தருடைய பந்தியுடனும் இக் கூடுகை நிறைவுபெற்றது. விசுவாசிகளின் பரிசுத்த வாழ்க்கைக்காகவும் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 07 போஜ்புரி -1 மற்றும் போஜ்புரி -2 ஆகிய கோட்டங்களில் நடைபெற்ற வேத வினா போட்டிகளில் 700 விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். விசுவாசிகள் வேதத்தை கற்பதில் ஆர்வம் காட்டவும் விசுவாசத்தின் நிலைத்து நிற்கவும் தங்கள் குடும்பத்தினருக்குச் சாட்சியாக வாழவும், சமுதாயத்தினர் இவர்கள் மூலமாகக் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 08 பஹ்வான்பூர் ஜெம்ஸ் சமுதாய மையத்தில் நடைபெற்ற பெண்களுக்கானச் சிறப்புக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். பஹ்வான்பூர், சந்த், ஹட்டா மற்றும் பிஹாரா ஆகிய பணித்தளங்களைச் சேர்ந்த 120 விசுவாசிகள் இக்கூடுகையில் பங்கேற்றனர். சகோதரி மாலினி வின்சென்ட் பெண்களின் வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனைகளையும் மற்றும் தேவ செய்தியையும் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்காக ஜெபித்தார். வரும் நாட்களில் பணித்தளங்களில் பெண்கள் சந்திக்கப்படவும், பெண்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 09 பெலாவன் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள், எவ்விதத் தடையுமின்றி திட்டமிடப்பட்டக் காலத்திற்குள் கட்டி முடிக்கப்படவும், சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டு வரும் ஜெம்ஸ் செயல்மையக் கட்டுமானப் பணிகளுக்காகவும், போஜ்புரி -1 கோட்டத்தில், கல்லறைத் தோட்டத்திற்கான நிலம் கிடைக்கவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 10 பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும், கிராமங்களில் வரும் நாட்களில் செய்யப்படவிருக்கும் நற்செய்திப் பணி மற்றும் கைப்பிரதி ஊழியங்களுக்காகவும், வாலிபர் சிறப்புக் கூடுகைகளுக்காகவும் ஜெபிப்போம்.