பிப்ரவரி 6 போஜ்புரி – 1 கோட்டத்தில், லூக்கா சுவிசேஷத்திலிருந்து நடத்தப்பட்ட வேதாகம வினாடி வினாப் போட்டியில், 300 விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். விசுவாசிகள் வேதத்தை அதிகம் தியானிக்கவும் மற்றும் வேத வாசிப்புப் பழக்கத்தை தங்கள் வாழ்க்கையில் அதிகரிக்கவும் இத்தகைய போட்டிகள் ஊக்கமளித்துவருகின்றன. குளிர்நாட்களை முன்னிட்டு, பணித்தளங்களில் தேவையுள்ள மக்களுக்கு இலவச குளிராடைகளை வழங்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தள விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும், விசுவாசிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படவும், உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் தடைகளை கர்த்தர் நீக்கவும் ஜெபிப்போம்.
பிப்ரவரி 7 சசராம் பணித்தளத்தின் ஜெம்ஸ் சமுதாய மையக் கட்டிடத்தின் மேற்கூரைப் பணிகள்
நிறைவடைய கர்த்தர் கிருபை செய்தார். இப்பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல்
மையக் கட்டுமானப் பணிகள் (GEMS Action center) எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், விடுதலையோடு விரைவில் ஜனங்கள் தேவனை
ஆராதிக்கவும் ஜெபிப்போம்.
பிப்ரவரி 8 பெலாவன் பணித்தளத்தில் சமுதாய மையக் கட்டிடத்துடன் ஊழியர் இல்லத்தினையும்
கட்டி முடிக்க கர்த்தர் உதவி செய்தார். இப்பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள
ஆலயக் கட்டுமானப் பணிகள் தடையின்றி நிறைவேறவும், துர்காவதி பணித்தளத்தில் தெபோராள் பயிற்சி
மையம் (DTC) விரைவில் தொடங்கப்படவும், வரவிருக்கும் மாதங்களில் பணித்தளங்களில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து நற்செய்தி
அறிவிப்பு ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
பிப்ரவரி 9 போஜ்புரி – 1 மற்றும்
போஜ்புரி – 2 ஆகிய
கோட்டங்களின் பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்ட சுவிசேஷ நிகழ்ச்சிகளின் மூலமாக,
அரசு அதிகாரிகள், கிராமத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்
சுமார் 700 பேர் மத்தியில்
கிறிஸ்துவின் அன்பினை பகிர்ந்துகொள்ளவும், அவர்களுடன் நல்லதோர் உறவினை உருவாக்கிக்கொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார்.





