Feb 2026

 


பிப்ரவரி 6
 
 போஜ்புரி – 1 கோட்டத்தில், லூக்கா சுவிசேஷத்திலிருந்து நடத்தப்பட்ட வேதாகம வினாடி வினாப் போட்டியில், 300 விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். விசுவாசிகள் வேதத்தை அதிகம் தியானிக்கவும் மற்றும் வேத வாசிப்புப் பழக்கத்தை தங்கள் வாழ்க்கையில் அதிகரிக்கவும் இத்தகைய போட்டிகள் ஊக்கமளித்துவருகின்றன. குளிர்நாட்களை முன்னிட்டு, பணித்தளங்களில் தேவையுள்ள மக்களுக்கு இலவச குளிராடைகளை வழங்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தள விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும், விசுவாசிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படவும், உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் தடைகளை கர்த்தர் நீக்கவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 7 சசராம் பணித்தளத்தின் ஜெம்ஸ் சமுதாய மையக் கட்டிடத்தின் மேற்கூரைப் பணிகள் நிறைவடைய கர்த்தர் கிருபை செய்தார். இப்பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் (GEMS Action center) எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், விடுதலையோடு விரைவில் ஜனங்கள் தேவனை ஆராதிக்கவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 8 பெலாவன் பணித்தளத்தில் சமுதாய மையக் கட்டிடத்துடன் ஊழியர் இல்லத்தினையும் கட்டி முடிக்க கர்த்தர் உதவி செய்தார். இப்பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் தடையின்றி நிறைவேறவும், துர்காவதி பணித்தளத்தில் தெபோராள் பயிற்சி மையம் (DTC) விரைவில் தொடங்கப்படவும், வரவிருக்கும் மாதங்களில் பணித்தளங்களில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து நற்செய்தி அறிவிப்பு ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 9 போஜ்புரி – 1 மற்றும் போஜ்புரி – 2 ஆகிய கோட்டங்களின் பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்ட சுவிசேஷ நிகழ்ச்சிகளின் மூலமாக, அரசு அதிகாரிகள், கிராமத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சுமார் 700 பேர் மத்தியில் கிறிஸ்துவின் அன்பினை பகிர்ந்துகொள்ளவும், அவர்களுடன் நல்லதோர் உறவினை உருவாக்கிக்கொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார்.  

Jan 2026

 





ஜனவரி -  07  'போஜ்புரி" 2 கோட்டத்தின் பம்ஹன் பரேட்டா கிராமத்தில் நடைபெற்ற  ஜெம்ஸ் இலவச மருத்துவ முகாம் மூலமாக 420 பேர் பயனடைந்தனர். இம்முகாமில், 16 மருத்துவ ஊழியர்கள் கலந்துகொண்டு, மக்களுக்கு சிகிச்சையளித்ததுடன் இயேசு கிறிஸ்துவின் அன்பினையும் அறிவிக்க கர்த்தர் கிருபைசெய்தார். இக்கிராமத்தில் நடைபெற்றுவரும் சுவிசேஷப் பணிகளின் மூலமாக வரும் நாட்களில் அநேக ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட ஜெபிப்போம். 

ஜனவரி -  08  'போஜ்புரி" 2 கோட்டத்தில், பிலிப்பியர் மற்றும் கொலோசெயர் நிருபங்களிலிருந்து நடைபெற்ற வேதாகமப் போட்டியில் பணித்தள மக்கள் 700 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவ்வகை வேதாகமப் போட்டிகள் வேத வாசிப்புப் பழக்கத்தினை விசுவாசிகளிடையே ஊக்குவிப்பதுடன், வசனத்தின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையினை ஊன்றக் கட்டுவதற்கும் உறுதுணையாக அமைவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் இவ்வகை வேதாகமப் போட்டிகளுக்காகவும் மற்றும் விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  09  'சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஜெம்ஸ் செயல் மையத்தின் மேற்கூரைப் பணிகள் முடிவடைய கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து நடைபெற்றுவரும் இச்செயல் மையத்தின் கட்டுமானப்பணிகள் எவ்விதத் தடையுமின்றி நிறைவடையவும் மற்றும் இப்பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஆத்தும ஆதாய ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஜனவரி - 10  'வட இந்தியாவை அதிகமாகத் தாக்கிவரும் இக்குளிர் நாட்களில், பணித்தளங்களில் சுமார் 200 குடும்பத்தினருக்கு இலவசமாக கம்பளிகளை வழங்க கர்த்தர் உதவிசெய்தார். விசுவாசிகள் மற்றும் ஊழியர்களை கர்த்தர் இக்குளிர் காலத்தில் பாதுகாக்க ஜெபிப்போம். 

ஜனவரி - 11 'பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள ஆலயக் கட்டுமானப்பணிகள் தடையின்றி நடைபெறவும், விரைவில் பணிகள் நிறைவுற்று ஜனங்கள் தேவனை ஆராதிக்கவும், வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் நற்செய்தி ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.  


December 2025

 மேற்கு மண்டலம்



டிசம்பர் 07 துர்க்காவதி ஜெம்ஸ் செயல் மையத்தில் நடைபெற்ற இரண்டு நாட்கள் ஊழியர் முகாமை கர்த்தர் ஆசீர்வதித்தார். போஜ்புரி-1 மற்றும் போஜ்புரி-2 ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பணித்தள ஊழியர்கள் இம்முகாமில் பங்கேற்று ஆசீர்வதிக்கப்பட்டனர். சகோ. அன்டன் கோமஸ் மற்றும் சகோ. ஜெயசீலன் ஆகியோர் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு, ஊழியர்களை உற்சாகப்படுத்தினர். இவ்விரு கோட்டங்களில் நடைபெறும் ஆத்தும அறுவடைப் பணிகளுக்காகவும் மற்றும் சபை ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 08 மேற்கு மண்டலத்தின்; நடைபெற்ற Giant கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தினங்கள் பர்ஹரி பணித்தளத்திலும், நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தினங்கள் மொகனியா பணித்தளத்திலும் மற்றும் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தினங்கள் பரசத்துவா பணித்தளத்திலும் நடைபெற்ற இக்கூடுகைகளில், விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் திறப்பில் நின்று ஜெபித்தனர். இத்தகைய ஜெப ஆவி விசுவாசிகளைப் பற்றிப்பிடிக்கவும், ஜெப வீரர்களாக விசுவாசிகள் மாறவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 09 துர்க்காவதி பணித்தளத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற போஜ்புரி-1 ஊழியர் குடும்பக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். ஊழியர்கள் தேவ சமூகத்தில் தங்களை ஆராய்ந்து அறியவும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் மற்றும் ஜெப வாழ்க்கையிலும் முன்னேறிச் செல்லவும் இக்கூடுகை வழிவகுத்தது. 

டிசம்பர் 10 சசராம் ஜெம்ஸ் செயல் மையத்தின் கட்டுமானப் பணிகள் முதல் தளம் வரை உயர கர்த்தர் உதவிசெய்தார். இப்பணிகள் வரும் நாட்களில் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெறவும், பணிசெய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம். அவ்வாறே, பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ள நாட்களுக்குள் தடையின்றி நிறைவேற்றி முடிக்கப்பட ஜெபிப்போம். 

டிசம்பர்11 போஜ்புரி-1 மற்றும் போஜ்புரி-2 ஆகிய கோட்டங்களில் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்டோர், கிறிஸ்துவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் வாயிலாக உறுதிசெய்தனர்; தேவனுக்கே மகிமை! இவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், இவர்களது குடும்பத்தினர் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.   

November 2025

                                                மேற்கு மண்டலம்



நவம்பர் 6 போஜ்புரி 1 கோட்டத்தில் வேதம் வாசிக்கும் பழக்கத்தை விசுவாசிகள் மத்தியில் ஊக்குவிக்கவும் மற்றும் வேதத்தின் மீதுள்ள ஆர்வத்தினைப் பெருக்கவும் நடைபெற்ற வேதாகம வினாடி வினாப் போட்டியில், பணித்தள விசுவாசிகள் 300 பேர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். விசுவாசிகளின் குடும்பத்திற்காகவும் மற்றும் பிள்ளைகள் கிறிஸ்துவின் சத்தியத்தில் வளர்க்கப்படவும் ஜெபிப்போம் .

நவம்பர் 7 பாபுவா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையத்தில் விசுவாசிகளுக்காக நடத்தப்பட்ட குடும்பக் கூடுகையில் 265 தம்பதியினர் பங்கேற்றனர்; சகோ. ரூபன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சகோதரி ஜெயந்தி ஆகியோர் தேவ செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டோர், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் நடைபெறும் சுவிசேஷ ஊழியங்களுக்காகவும் மற்றும் வாலிபர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 8 போஜ்புரி-2 கோட்டத்தின் அனைத்து ஊழியர்களுக்கான மூன்று நாட்கள் உபவாச ஜெபம், செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்றது. ஊழியர்கள் குடும்பமாக கலந்துகொண்டு ஜெபத்திலும், சுயபரிசோதனையிலும் தங்கள் நேரத்தைச் செலவிட ஏற்ற தருணமாக அமைந்தது. உத்திரப்பிரதேசத்தில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்துநிற்கவும் ஜெபிப்போம். 

நவம்பர் 9 கோடாரி பணித்தளத்தில் சமுதாய மையக் கட்டிடத்தினைப் புதுப்பிக்க கர்த்தர் கிருபை செய்தார். இப்பணித்தளத்தில், செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் கட்டப்பட்டுவரும் ஊழியர் இல்லத்திற்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 10 சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஜெம்ஸ் செயல்மையக் கட்டிடத்தின் பணிகள் எவ்விதத் தடையுமின்றி குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டிமுடிக்கப்படவும், பெலாவன் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் இடையூறின்றி தொடர்ந்து நடைபெறவும் மற்றும் வரும் நாட்களில் பணித்தளங்களில் திட்டமிடப்பட்டிருக்கும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

October 2026

                                                  மேற்கு மண்டலம்



அக்டோபர் : 06 மஸிகாபாத் பணித்தளத்தில் ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு முகாமில், பணித்தள மக்கள் 30 பேர் கலந்துகொண்டனர். கல்வியின் முக்கியத்துவைத்தைக் குறித்தும் மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கான கல்வியின் அவசியத்தைக் குறித்தும் சகோதரி மகதலேனா எடுத்துரைத்தார். 

அக்டோபர் : 07 மேற்கு மண்டலத்தின் பல்வேறு பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றோர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதுள்ள அன்பை சபைக்கு வெளிப்படுத்தினர். இவர்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், சொந்த ஜனங்களுக்கு முன் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் சாட்சிகளாக வாழவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 08  Peace 2 கோட்டத்தின் விசுவாசிகளுக்காக நடத்தப்பட்ட குடும்பக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில், பல்வேறு பணித்தளங்களைச் சேர்ந்த சுமார் 300 விசுவாசிகள் குடும்பமாகப் கலந்துகொண்டனர். சென்னையைச் சேர்ந்த சகோதரர் ஜான் சாமுவேல் இக்கூடுகையில் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு, கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. தொடர்ந்து, செப்டம்பர் 14 அன்று எபேசியர் மற்றும் கலாத்தியர் புத்தகங்களிலிருந்து இக்கோட்டத்தில் நடைபெற்ற வேத வினாப் போட்டிகளில் 700 பேர் பங்கேற்றனர்; இது விசுவாசிகள் வேதவாசிப்பில் தொடர்ந்து ஊக்கமடைய வகைசெய்தது. 

அக்டோபர் : 09  சசராம் பணித்தளத்தில் ஜெம்ஸ் செயல் மையக் கட்டிடத்தின் அடித்தளப் பணிகள் நிறைவுற்று, அடுத்த கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் வரும் நாட்களில் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், திட்டமிடப்பட்டுள்ள நாட்களில் செயல் மையம் கட்டிமுடிக்கப்படவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 10 பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்வித இடையூறுமின்றி குறிப்பிட்ட நாட்களில் கட்டிமுடிக்கப்படவும், மேலும், பர்ஹரி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்காக ஏற்ற நிலம் விரைவில் வாங்கப்படவும், இப்பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டிமுடிக்கப்பட்டு ஜனங்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும் ஜெபிப்போம். 




SEP 2025

 

                                                       மேற்கு மண்டலம்


செப்டம்பர் 06 ஆகஸ்ட் 15 அன்று, B-1 கோட்டத்தின் ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட குடும்பக் கூடுகையில் 35 ஊழியர்கள் குடும்பமாகக் இக்கூடுகையில், சென்னையைச் சேர்ந்த சகோதரர் ஜான் சாமுவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. ஆவிக்குரிய வாழ்க்கையில் புத்துணர்ச்சி பெற்று, தேவ இராஜ்யத்தின் பணிகளைத் தொடர ஊழியர்களை இக்கூடுகை உற்சாகப்படுத்தியது.

செப்டம்பர் 07 முசஹர் சமூக மக்களது பொருளாதார நிலையினை மேம்படுத்தும் பொருட்டு, அவர்களுக்கு இலவசமாக ஆடுகள் விநியோகிக்கும் திட்டம் கோத் மற்றும் ஏக்ராசி ஆகிய இரண்டு  பணித்தளங்களில் நடைபெற்றது. தெரிந்தெடுக்கப்பட்ட 9 பயனாளர்களின் குடும்பத்திற்கு தலா 2 ஆடுகள் வழங்கப்பட்டன. இச்சமுதாய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவும், வருங்காலச் சந்ததியினர் கல்வியறிவைப் பெறவும் மற்றும் இவர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் வாயிலாக கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 08 பணித்தளங்களில் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டோர் உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேல் உள்ள தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் சமுதாயப் பராமரிப்பு மையத்தின் கட்டுமானப் பணிகளை,  மேல்தளம் வரை செய்துமுடிக்க உதவியதற்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுகின்றோம்;. இக்கட்டுமானப் பணிகள் விரைவில் எவ்வித தடையுமின்றி  திட்டமிடப்பட்டுள்ள நாட்களுக்குள் முடிக்கப்பட ஜெபிப்போம். 

செப்டம்பர் 09 சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையத்தின் கட்டுமானப் பணிகள் எவ்வித தடையும் இன்றி குறிக்கப்பட்ட நாட்களுக்குள் திட்டமிடப்பட்டபடி கட்டிமுடிக்கப்படவும், இப்பணித்தள ஆலயத்திற்காகவும் மற்றும் விசுவாசிகளுக்காகவும், பர்ஹாரி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட ஏற்ற நிலம் கிடைக்கவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 10 உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்கு உண்டாயிருக்கும் தடைகள் நீக்கவும்,  விடுதலையோடு ஜனங்கள் ஆலயத்தில் ஆண்டவரே ஆராதிக்கும் சூழ்நிலை உருவாகவும், இம்மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளிகளின் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கிறிஸ்துவை கண்டு கொள்ளவும், வாலிபர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் செய்யப்பட்டு வரும் ஊழியங்கள் நல்ல பலனை தரவும் ஜெபிப்போம்.

August 2025

 மேற்கு மண்டலம்

ஆகஸ்ட் 06  பாபுவா பணித்தளத்தில் நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில் 300 விசுவாசிகள் கலந்துகொண்டனர். சகோ. வின்சென்ட் ஜெயராஜ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்து கொண்டார். பாதங்கழுவுதலுடனும் மற்றும் கர்த்தருடைய பந்தியுடனும் இக் கூடுகை நிறைவுபெற்றது. விசுவாசிகளின் பரிசுத்த வாழ்க்கைக்காகவும் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 07 போஜ்புரி -1 மற்றும் போஜ்புரி -2  ஆகிய கோட்டங்களில் நடைபெற்ற வேத வினா போட்டிகளில் 700 விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  விசுவாசிகள் வேதத்தை கற்பதில் ஆர்வம் காட்டவும் விசுவாசத்தின் நிலைத்து நிற்கவும் தங்கள் குடும்பத்தினருக்குச் சாட்சியாக வாழவும், சமுதாயத்தினர் இவர்கள் மூலமாகக் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 08 பஹ்வான்பூர் ஜெம்ஸ் சமுதாய மையத்தில் நடைபெற்ற பெண்களுக்கானச் சிறப்புக்  கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். பஹ்வான்பூர், சந்த், ஹட்டா மற்றும் பிஹாரா ஆகிய பணித்தளங்களைச் சேர்ந்த 120 விசுவாசிகள் இக்கூடுகையில் பங்கேற்றனர். சகோதரி மாலினி வின்சென்ட் பெண்களின் வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனைகளையும் மற்றும் தேவ செய்தியையும் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்காக ஜெபித்தார். வரும் நாட்களில் பணித்தளங்களில் பெண்கள் சந்திக்கப்படவும், பெண்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 09 பெலாவன் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள், எவ்விதத் தடையுமின்றி திட்டமிடப்பட்டக் காலத்திற்குள் கட்டி முடிக்கப்படவும், சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டு வரும் ஜெம்ஸ் செயல்மையக் கட்டுமானப் பணிகளுக்காகவும், போஜ்புரி -1 கோட்டத்தில், கல்லறைத் தோட்டத்திற்கான நிலம் கிடைக்கவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 10 பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும், கிராமங்களில் வரும் நாட்களில் செய்யப்படவிருக்கும் நற்செய்திப் பணி மற்றும் கைப்பிரதி ஊழியங்களுக்காகவும், வாலிபர் சிறப்புக் கூடுகைகளுக்காகவும் ஜெபிப்போம்.