மேற்கு மண்டலம்
டிசம்பர் 07 துர்க்காவதி ஜெம்ஸ் செயல் மையத்தில் நடைபெற்ற இரண்டு நாட்கள் ஊழியர் முகாமை கர்த்தர் ஆசீர்வதித்தார். போஜ்புரி-1 மற்றும் போஜ்புரி-2 ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பணித்தள ஊழியர்கள் இம்முகாமில் பங்கேற்று ஆசீர்வதிக்கப்பட்டனர். சகோ. அன்டன் கோமஸ் மற்றும் சகோ. ஜெயசீலன் ஆகியோர் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு, ஊழியர்களை உற்சாகப்படுத்தினர். இவ்விரு கோட்டங்களில் நடைபெறும் ஆத்தும அறுவடைப் பணிகளுக்காகவும் மற்றும் சபை ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 08 மேற்கு மண்டலத்தின்; நடைபெற்ற Giant கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தினங்கள் பர்ஹரி பணித்தளத்திலும், நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தினங்கள் மொகனியா பணித்தளத்திலும் மற்றும் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தினங்கள் பரசத்துவா பணித்தளத்திலும் நடைபெற்ற இக்கூடுகைகளில், விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் திறப்பில் நின்று ஜெபித்தனர். இத்தகைய ஜெப ஆவி விசுவாசிகளைப் பற்றிப்பிடிக்கவும், ஜெப வீரர்களாக விசுவாசிகள் மாறவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 09 துர்க்காவதி பணித்தளத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற போஜ்புரி-1 ஊழியர் குடும்பக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். ஊழியர்கள் தேவ சமூகத்தில் தங்களை ஆராய்ந்து அறியவும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் மற்றும் ஜெப வாழ்க்கையிலும் முன்னேறிச் செல்லவும் இக்கூடுகை வழிவகுத்தது.
டிசம்பர் 10 சசராம் ஜெம்ஸ் செயல் மையத்தின் கட்டுமானப் பணிகள் முதல் தளம் வரை உயர கர்த்தர் உதவிசெய்தார். இப்பணிகள் வரும் நாட்களில் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெறவும், பணிசெய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம். அவ்வாறே, பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ள நாட்களுக்குள் தடையின்றி நிறைவேற்றி முடிக்கப்பட ஜெபிப்போம்.
டிசம்பர்11 போஜ்புரி-1 மற்றும் போஜ்புரி-2 ஆகிய கோட்டங்களில் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்டோர், கிறிஸ்துவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் வாயிலாக உறுதிசெய்தனர்; தேவனுக்கே மகிமை! இவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், இவர்களது குடும்பத்தினர் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.






