• ஏப்ரல் 14 முதல் 16 வரையிலான நாட்கள் ராஜ்கிர் பணித்தளத்தில் நடைபெற்ற மண்டல முகாமில் ஜெம்ஸ் சமூக பராமரிப்பு ஊழியர்கள் குடும்பமாகப் பங்கேற்றனர். இம்முகாமில்
சகோ. வின்சென்ட் ஜெயராஜ், சகோ. பெஞ்சமின் மற்றும் சகோதரி சஜிலா நார்டன் ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். ஆராதனை, தேவ செய்தி மற்றும் விளையாட்டுகள் என முகாமின் ஒவ்வொரு பகுதியும் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைந்தன.
• கோச்சஸ் பணித்தளத்தில் ஏப்ரல் 10 அன்று நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் சகோதரி ஜெயந்தி கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். சுமார் 120 பெண்கள் இக்கூடுகையில் கலந்துகொண்டனர்.
• ஏப்ரல் 12 அன்று சசராம் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில் 400 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சகோ. பிரவீன் கர்த்தருடையச் செய்தியைப் பகிர்ந்துகொண்டதுடன், வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கி, ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பெலப்பட வழிநடத்தினார். வாலிபத்தின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வண்ணம், ஜெம்ஸ் வாலிபர் ஊழியர்களின் மூலமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
• வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்துகொள்ளவிருக்கும் சிறுவர் சிறுமியர் மற்றும் அவர்களது பெற்றோர்களின் இரட்சிப்பிற்காகவும், சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப்பணிகள் எவ்விதத் தடையுமின்றி திட்டமிடப்பட்ட நாட்களில் கட்டிமுடிக்கப்படவும், பெலாவன் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், பர்ஹேரி பணித்தளத்தில் ஆலயம் கட்டுவதற்கான நிலம் விரைவில் வாங்கப்படவும் மற்றும் உத்திரப்பிரதேசம் மாநில ஊழியங்களில் உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும், விசுவாசிகள் விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் ஜெபிப்போம்.