April 2025

 மேற்கு மண்டலம்


• போஜ்புரி கோட்டத்தின் மொகனியா பணித்தளத்தில் மார்ச் 22 அன்று நடத்தப்பட்ட போதகர் கருத்தரங்கில், 40 போதகர்கள் பங்கேற்றனர்.      சகோ. S.D.பொன்ராஜ் இக்கருத்தரங்கில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். கைமூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களைக் குறித்து கலந்துரையாடவும், வரும் நாட்களில் செய்யப்படவிருக்கும் ஊழியங்களுக்காக போதகர்களாக ஒருமனதுடன் இணைந்து ஜெபிக்கவும் இக்கருத்தரங்கு உதவியது.

• பெலாவன் மற்றும் ஹட்டா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். 500 பேர் இக்கூட்டங்களில் பங்கேற்று கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டனர்.

• கருவந்தியா பணித்தளத்தில் நடைபெற்ற போஜ்புரி-2 கோட்டத்தின் விசுவாசிகளுக்கான ஒருநாள் கன்வென்ஷன் கூட்டத்தில், பல்வேறு பணித்தள சபைகளைச் சேர்ந்த 1100 விசுவாசிகள் பங்கேற்றனர். சகோ. குணசேகரன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். இணைந்து நடைபெற்ற சிறுவர் முகாமில், கூட்டத்தில் பங்கேற்ற விசுவாசிகளின் பிள்ளைகள் 300 பேருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், அவர்களை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நேராக வழிநடத்தவும் கர்த்தர் உதவிசெய்தார்.

• மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தினங்கள், கருவந்தியா பணித்தளத்தில் நடைபெற்ற தலைவர்களுக்கான கூடுகையில், ஊழியத்தின் முன்னேற்றம்; மற்றும் விரிவாக்கம் ஆகியவைகளைக் குறித்து ஆலோசிக்கவும், ஜெபத்துடன் திட்டங்களை வகுக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார்.

• சசராம் பணித்தளத்தில், ஜெம்ஸ் செயல் மையத்தின் கட்டுமானப்பணிகளை ஜெபத்துடன் தொடங்க தேவன் கிருபைசெய்தார். இக்கட்டுமானப் பணிகள் எவ்வித தடையுமின்றி, திட்டமிடப்பட்ட நாட்களில் கட்டிமுடிக்கப்பட ஜெபிப்போம்.

• பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளுக்காகவும், உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் ஊழியங்களில் கர்த்தர் திறந்தவாசலைக் கட்டளையிடவும் ஜெபிப்போம்.